Header

Sri Lanka Army

Defender of the Nation

08th August 2021 10:30:20 Hours

இரண்டு நட்சத்திர நிலை உயர்வு பெற்ற பத்து அதிகாரிகளுக்கு தளபதியின் வாழ்த்துக்களுடன் நிலைச் சின்னம்

இராணுவத்தின் பத்து சிரேஸ்ட பிரிகேடியர்களாவிருந்து இரண்டு நட்சத்திர சின்னங்களுடன் மேஜர் ஜெனரல்களாக நிலை உயர்வு பெற்ற பத்து அதிகாரிகளும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடமிருந்து நிலை உயர்வுக்கான சின்னகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றனர்.

அதற்கமைய வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதி இலங்கை பீரங்கிப்படையின் மேஜர் ஜெனரல் வந்தித்த மஹின்கந்த, கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதி இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் நிலாம் ஹேரத், போக்குரத்து மற்றும் விநியோக பணிப்பாளர் இலங்கை இராணுவ சேவைப்படையின் மேஜர் ஜெனரல் ஹிரோஷ வனிகசேகர, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சூரியவெவ வளாகத்தின் பணிப்பாளர் கெமுனு ஹேவா படையின் மேஜர் ஜெனரல் பிரஷாத் எதிரிசிங்க, பாதுகாப்பு கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் சிரேஸ்ட ஆலோசகர் விஜயபாகு காலாட் படையின் மேஜர் ஜெனரல் லக்சிறி பெரேரா, தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தலைமை பணிப்பாளர் இலேசாயுத காலாட் படையின் மேஜர் ஜெனரல் சுஜிவ ஹெட்டியாராச்சி, சமிஞ்சை பிரிகேட் தளபதி இலங்கை இராணுவ சமிஞ்சை படையின் மேஜர் ஜெனரல் லலித் ஹேரத், 64 வது படைப்பிரிவு தளபதி விஜயபாகு காலாட் படையின் மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன்,

அம்பாறை போர்கள பயிற்சி கல்லூரியின் தளபதி விஜயபாகு காலாட் படையின் கல்ப சஞ்சீவ, 65 வது படைப்பிரிவு தளபதி கமாண்டோ படையணியின் மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி ஆகியோர் தங்களது நிலை உயர்வுக்கான சின்னங்களை ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர். அவர்களின் புதிய நிலைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தும், எதிர்கால கடமைகளை நிறைவேற்றுமாறு வாழ்த்துக்களைத் தெரிவித்தும் இராணுவத் தளபதி சின்னங்களை அணிவித்தார். மேற்படி பொறுப்புகளை வகிக்க உள்ளோருக்கு வாழ்த்துகளை கூறிய தளபதி அதற்கான கட்டளைக் கோல்களையும் அவர்களுக்கு வழங்கி வைத்தார். மேற்படி சிரேஸ்ட அதிகாரிகள் விரைவில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முப்படைகளின் சேனாதிபதியான அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களினால் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் பரிந்துரைகளுக்கு அமைவாக மேற்படி சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.