Header

Sri Lanka Army

Defender of the Nation

30th July 2021 15:59:45 Hours

காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டது

112 வது பிரிகேட் படையினர் பதுளை மாவட்டத்தின் பம்பரகல மலைப் பகுதியில் வறண்ட வானிலை காரணமாக ஏற்பட்ட காட்டுத் தீயினை செவ்வாய்க்கிழமை (27) கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் அறிவுறுத்தல்களின்படி 11 வது படைப்பிரிவு தளபதி மற்றும் 112 பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதல்களில் படையினரால் தீ வேகமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.