30th July 2021 12:00:28 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 52 வது படைப்பிரிவினர் நாவற்குழி சமூர்த்தி சுமன விகாரை விகாராதிபதியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க அப்பகுதியில் மடாலயம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அவசியமான கட்டிட நிர்மாண மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவங்களை பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளனர்.
விகாரை நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க 52 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர பீரிஸ் அவர்களினால் வியாழக்கிழமை (29) நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த மடாலயக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் படையினரால் முன்னெடுக்கப்பட உள்ளது.