24th July 2021 17:15:42 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நுவரெலியா மற்றும் ஆவா எலிய பகுதிகளில் அண்மையில் 3 வது (தொ) இலங்கை சிங்கப்படை சிப்பாய்களால் மேற்கொள்ளப்பட்டும் விடுமுறை விடுதியின் கட்டுமான பணிகள் தொடர்பில் திங்கட்கிழமை (19) மீளாய்வு செய்தார்.
நுவரெலியாவிலுள்ள சிங்கப்படை தலைமையகத்திற்கு வருகைத் தந்த மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கு 3 வது (தொ) இலங்கை சிங்கப் படையின் கட்டளை அதிகாரி வரவேற்பளித்தார்.
இந்த விஜயத்தின் நினைவம்சமாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே 3 வது (தொ) இலங்கை சிங்கப் படை தலைமையகத்திலுள்ள விருந்தினர் பதிவேட்டில் எண்ணப் பகிர்வுகளை குறிபிட்டார்.
அதனையடுத்து 3 வது (தொ) இலங்கை சிங்கப் படை தலைமையகத்திற்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நுவரெலியா மற்றும் ஆவா எலிய பகுதியிலுள்ள விடுமுறை விடுதிகளின் நிர்மாண பணிகளை பார்வையிட்டார்.
இந்த விஜயத்தின் போது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அனைத்து தருணங்களிலும் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் அர்பணிப்புடன் கூடிய சிறந்த சேவையின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இந்த விஜயத்தின் போது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.