24th July 2021 16:20:42 Hours
மட்டக்களப்பு “பவுன்டேஷன் ஒப் லயன்ஸ்” கழகம் மற்றும் “அல்காமி ஹெவி மெட்டல் பிரைவேட் லிமிடெட்” ஆகியவற்றுடன் இணைந்து 233 வது பிரிகேடினரால் குஞ்சாங்குளம், மதுரங்கேணிகுளம் மற்றும் கிரிமடியான பகுதிகளில் உள்ள 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அன்பளிப்புக்களை வழங்கும் திட்டம் வியாழக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது.
5 ஆம் வகுப்பு புலைமை பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் 27 மாணவர்களுக்கான உதவித் தொகையுடன், புத்தக் பைகள், மடிக்கணினிகள், பல்லூடக எறிவீ மற்றும் இலவச இணைய இணைப்பு பெக்கேஜூகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி ஜெனரல் சன்ன வீரசூரியாவின் வழிகாட்டலுக்கமைய, 23 வது படைப்பிரிவு கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த மற்றும் 233 வது பிரிகேட் தளபதி வசந்த ஹேவகே ஆகியோரால் மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.