Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd July 2021 08:45:13 Hours

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து பேர் வெளியேற்றம் 544

இன்று காலை (24) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,815 பேர் கொவிட 19 தொற்றாளர்களாக இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில், 30 பேர் வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர்கள். ஏனைய 1,785 பேர் உள்நாட்டில் இணங்காணப்பட்டவர்கள். இதில் பெரும்பான்மையாக கம்பஹா மாவட்டத்தில் 438 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 364 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 138 பேரும் ஏனைய மாவட்டங்களில் 845 பேரும் இணங்காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (24) காலை வரை இறந்தவர்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 293,112 கொவிட் 19 தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 183,880 பேர் புத்தாண்டுக்குப் பிறகு பதிவாகியுள்ளனர்.

இன்று (24) காலை வரை (கடந்த 24 மணிநேரம்) 953 தொற்றாளர்கள் இடைநிலை பராமரிப்பு நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று (24) நிலவரப்படி ஹோட்டல்கள் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் 64 இல் 3,944 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இன்று (24) காலையில் 544 பேர் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை முடித்துக் கொண்டு 19 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

ஜூலை 22 திகதி 26 ஆண்களும் 17 பெண்களும் உட்பட 43 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.