20th July 2021 18:28:46 Hours
மேஜர் ஜெனரல் சமந்த சில்வா திங்கட்கிழமை (19) இராணுவ தலைமையகத்தின் பணிப்பகத்தின் 30 வது வழங்கல் பணிப்பாளர் நாயகமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
புதிதாக நியமிக்கப்பட்ட வழங்கல் பணிப்பாளர் நாயகம் மத அனுஸடடானங்களுக்கு மத்தியில் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் அவர் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 22 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார்.
குறித்த நியமனத்தில் இருந்த மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து இவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
வழங்கல் கிளையின் கட்டளையின் கீழுள்ள பணிப்பகத்தின் பணிப்பாளர்கள், கிளையின் பணிநிலை அதிகாரிகள் ,சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.