11th July 2021 07:24:10 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை (8) தியத்தலாவையிலுள்ள அப்படைத் தலைமையகத்தில் வைத்து அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாக நியமனம் பெற்ற மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கு அதிகாரிகளால் அன்பாக வரவேற்பளிக்கப்பட்டதுடன், 10 வது கஜபா படையணியின் படையினரால் காவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
அதனையடுத்து தனது பதவியேற்பை குறிக்கும் வகையில் மரக் கன்று ஒன்றை நாட்டி வைத்த மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கைசாத்திட்டதோடு, இந்நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் பங்குபற்றினர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்ட தளபதியின் உரையை தொடர்ந்து அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இந்நிகழ்வில் 11 வது மற்றும் 12 வது படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.
அவர் தற்போதைய நியமனத்திற்கு முன்பாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக சேவையாற்றினார்.