06th July 2021 18:15:58 Hours
இன்று காலை (07) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 934 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 15 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள். ஏனைய 919 பேர் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களில் அதிகமாக 201 பேர் கொழும்பு மாவட்டத்தில் இணங்காணப்பட்டுள்ளதுடன், 160 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 102 பேர் நுவரெலிய மாவட்டத்திலும் இணங்காணப்பட்டுள்ளனர். ஏனைய மாவட்டங்களில் 456 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இன்று காலை (07) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 267,432 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 160,135 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்களாவர்.
இன்று (07) காலை 0600 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,717 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இன்று (07) காலை 0600 மணி வரையான காலப்பகுதியில் (கடந்த 24 மணி நேரத்தில்) 23 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 541 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர். இன்று (07) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,170 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜூலை மாதம் 05 ம் திகதி இலங்கைக்குள் 45 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 30 பெண்களும் 15 ஆண்களும் அடங்குவர்.
இன்று (07) நடைமுறைக்கு வரும் வகையில் நுவரெலிய மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சின் கிராம சேவகர் பிரிவின் மத்திய பிரிவு மற்றும் திருக்கோணமலை மாவட்டத்தின் திருக்கோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகராஜ வலவ்வ ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.