06th July 2021 18:25:30 Hours
இப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிவில் விவகாரங்களின் ஆதரவை ஒருங்கிணைப்பதற்கும் மற்றும் ஒத்துழைப்பதற்காகவும் ஒரு விரிவான புதுப்பிப்பைப் பெறுவதற்கும், புதிதாக நியமிக்கப்பட்ட முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்கள் சிவில் விவகாரங்கள் தொடர்பான அனைத்து பங்குதாரர்களுடனும் நல்லுறவுக்கான கலந்துரையாடல் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (2) ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் சட்டவிரோத மரம் வெட்டுதல், மணல் அகழ்வு, சட்ட விரோத மதுபாணம் தாயாரித்தல், தொல்பொருள் இடங்களின் பாதுகாப்பு, கொவிட் -19 கட்டுப்பாடு, சமூக உதவி, விவசாய அம்சங்கள் போன்றன விரிவாக ஆராயப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், கரைத்துறைப்பற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், 59 வது , 64 வது மற்றும் 68 வது படைப்பிரிவுகளின் தளபதிகள், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள், பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையின் அதிகாரிகள், முல்லைத்தீவு பிரதேச வன அலுவலர், வடக்கு மாகாணம் நில அளவை மற்றும் அகழ்வு திணைக்கள பொறியியலாளர், தொல்பொருள் அலுவலர் மற்றும் வனவிலங்குத் திணைக்கள உதவி பணிப்பாளர் என பலர் பங்கேற்றனர்.