05th July 2021 23:08:35 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் 233 வது பிரிகேட்டின் படையினர் வெள்ளிக்கிழமை (25) வெளிகந்த செவனபிட்டிய தெலிங்கு கிராமத்தின் 20 ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை பகிர்ந்தளித்தனர்.
இந்த நிகழ்வு 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகேயின் ஒருங்கிணைப்பில் 23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய ஆகியோரின் மேற்பார்வையில் முன.னடுக்கப்பட்டது.
233 வது பிரிகேட் தளபதி ஏழைக் குடும்பங்களிடையே உலர் உணவு பொதி பகிர்ந்தளிப்பில் கலந்துக் கொண்டு நல்வாழ்வு தொடர்பாக விசாரித்தது.
இந் நிகழ்ச்சியில் சிரேஸ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.