04th July 2021 17:00:03 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 613 வது பிரிகேடின் 3 வது கெமுனு ஹேவா படையின் சிப்பாய்கலால் அண்மையில் தீப்பரவலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலில் இருந்து கரையொதுங்கிய கழிவுகளை சேகரிக்கும் பணிகள் வல்லிவல கடற்கரையில் வியாழக்கிழமை (1) முன்னெடுக்கப்பட்டன.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு சுகாதார பாதுகாப்பு அச்சுறுத்தலை தணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதையடுத்து கரையொதுங்கிய கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டன.
61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே, 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடிதுவக்கு மற்றும் கட்டளை அதிகாரி ஆகியோர் நேரடியாக இத்திட்டத்தில் பங்கெடுத்தனர்.