02nd July 2021 13:30:26 Hours
இன்று காலை (04) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,262 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 11 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள். ஏனைய 1,251 பேர் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களில் அதிகமாக 247 பேர் கம்பஹா மாவட்டத்தில் இணங்காணப்படுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 224 தொற்றாளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 105 தொற்றாளர்களும் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 675 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் என்று கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இன்று காலை (04) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 264,056 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 157,072 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்களாவர்.
இன்று (04) காலை வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,853 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இன்று (04) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 74 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5,276 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று (04) காலை 0600 மணி வரையான காலப்பகுதியில் (கடந்த 24 மணி நேரத்தில்) 32 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 1,920 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்.
ஜூலை மாதம் (02) இலங்கைக்குள் 34 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 13 பெண்களும் 21 ஆண்களும் அடங்குவர்.
இன்று (04) நடைமுறைக்கு வரும் வகையில் கண்டி மாவட்டத்தின் கடுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடிவாவல கிராம சேவகர் பிரிவிற்கு சொந்தமான சாகரதெனிய தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (04) காலை களுத்துறை மாவட்டத்தின் மஹாவஸ்கடுவ தெற்கு கிராம சேவகர் பிரிவு, மட்டக்களப்பு மாவட்டத்தின் களவாஞ்சிக்குடி பொலிஸ் பிரதேசத்தின் பெரியகல்லாறு 2 கிராம சேவகர் பிரிவு, பெரியகல்லாறு 3 கிராம சேவகர் பிரிவு, பெரியகல்லாறு 3 தெற்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவின் பெரமுன தெற்கு கிராம சேவகர் பிரிவுகள் ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.