Header

Sri Lanka Army

Defender of the Nation

28th June 2021 12:08:45 Hours

3 வது இலங்கை சிங்கப்படை சிப்பாய்களால் மேலுமொரு தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது

நுவரெலியா மாவட்டத்தின் மாகுடுகலவில் உள்ள வனப்பகுதியொன்றில் திடீரென ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை (27) அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த படையினர் தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

112 வது பிரிகேட் தளபதி வழங்கிய வழிகாட்டலுக்கமைய படையினரால் தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.