27th June 2021 23:27:08 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய 7 வது இலேசாயுத காலட்படை, 6 வது இலங்கை சிங்கப் படை, 9 வது இலங்கை சிங்கப் படை, 9 வது விஜயபாகு காலாட் படை மற்றும் 14 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் தலைமையகங்களின் வளாகங்களுக்குள் சேதன பசளை உற்பத்தியை முன்னெடுப்பதற்கான தளங்களை நிறுவியுள்ளனர்.
57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன மற்றும் 571 பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர, 572 பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால மற்றும் 572 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மனோஜ் மதுரப்பெரும ஆகியோரின் தரமான வழிகாட்டலுக்கமைய 57 வது படைப்பிரிவின் சிப்பாய்களால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.