25th June 2021 18:00:39 Hours
இன்று காலை (26) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,876 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 16 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்களும் ஒருவர் வெளிநாட்டவரும் ஆவர். ஏனைய 1,859 பேர் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களில் அதிகமாக 378 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதுடன் களுத்துறை மாவட்டத்தில் 347 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 176 தொற்றாளர்களும் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 958 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இன்று காலை (26) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 249,925 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 143,708 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்களாவர்.
இன்று (26) காலை 0600 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 1,843 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறினர். ஜூன் மாதம் (24) இலங்கைக்குள் 48 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 22 பெண்களும் 26 ஆண்களும் அடங்குவர்.
இன்று (26) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 72 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 8,389 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (26) காலை 0600 மணி வரையான காலப்பகுதியில் (கடந்த 24 மணி நேரத்தில்) 27 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 1,042 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்.
இன்று (26) காலை வரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 09 பொலிஸ் பிரிவுகளும் 356 கிராம சேவையாளர் பிரிவுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இன்று (26) காலை தனிமைப்படுத்தப்பட்ட 4 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளடங்களாக 61 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.