19th June 2021 20:56:24 Hours
துணுக்காய் மற்றும் நட்டாங்கண்டல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை விநியோகிக்கும் திட்டம் 2021 ஜூன் 13 ஆம் திகதி , 65 வது படைப் பிரிவுத் தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்கவின் வழிகாட்டல், மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
நன்கொடையாளரான திரு.ரங்கன் மற்றும் மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி அனுரகாந்தன் ஆகியோரால் வழங்கப்பட்ட 50 உலர் உணவு பொதிகள் பகிர்நதளிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் அவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், 65 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திஸாநாயக்க, முல்லைத்தீவு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர்கள், 652 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் உதய ஹேரத், பதவி நிலை அதிகாரிகள் மற்றும் 17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.