Header

Sri Lanka Army

Defender of the Nation

15th June 2021 14:33:28 Hours

கடந்த 24 மணி நேரத்தில் 2,334 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்- நொப்கோ தெரிவிப்பு

இன்று காலை (16) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,334 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் வெளிநாட்டைச் சேரந்த ஒருவரும், 58 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இலங்கையர்களாவர். ஏனையவர்கள் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்களாவர், அவர்களில் அதிகமாக கொழும்பு மாவட்டத்தில் 546 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 268 தொற்றாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 250 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதுடன் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 1211 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று காலை (16) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 228,255 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் , 130,642 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்களாவர்.

இன்று புதன்கிழமை (16) காலை வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 2,014 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறினர். கடந்த 24 மணி நேரத்தில் எந்த மரணமும் ஏற்படவில்லை. ஆனால் ஜூன் 14 ஆம் திகதி 55 மரணங்கள் ஏற்பட்டுள்ளதோடு, அவர்களில் 33 ஆண்களும் மற்றும் 22 பெண்களும் உள்ளடங்குவர்.

இன்று (16) புதன்கிழமை காலை வரை 70 ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,943 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (16) காலை வரையான காலப்பகுதியில் 27 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 493 பேர் தங்களது தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்.

இன்று (16) நிலவரப்படி இந்த ஊடக செய்தியை வெளியிடும் நேரத்தில், முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 258 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைபடுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. குருநாகல் மாவட்டத்தில் உள்ள பன்னல பொலிஸ் பிரிவுடனான 93 கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன, நடைமுறையில் உள்ள பயணத்தடையானது மீள் அறிவிப்பு வரையில் நீடிக்கும்.