Header

Sri Lanka Army

Defender of the Nation

14th June 2021 21:35:46 Hours

59 வது படைப் பிரிவு படையினரால் முல்லைத்தீவு வைத்தியசாலை சுத்தம் செய்யும் பணிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59 வது படைப் பிரிவின் படையினர் முல்லைத்தீவு வைத்தியசாலை வளாகம் மற்றும் அதன் சுற்று வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகளை வெள்ளிக்கிழமை (11) ஆம் திகதி மேற்கொண்டனர்.

இந்த திட்டமானது சுகாதார அதிகாரிகளால் இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, 59 வது படைப் பிரிவின் 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

இப் பணியானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய, 59 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பி.டி சூர்ய பண்டார அவர்களின் மேற்பார்வையின் கீழ் இடம் பெற்றது.