14th June 2021 07:16:29 Hours
முல்லைத்தீவு பிரதேசத்தின் தடியமலை முதல் முதியன்கட்டு வரையிலான பாதையை மறுசீரமைக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை (11) முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 வது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 643 வது பிரிகேட் படையினர், 6 வது கல பொறியியலாளர் மற்றும் 13 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரின் பங் பற்றுதலுடன் முன் னெடுக்கப்பட்டது. இந்த திட்டம் வெள்ளிக்கிழமை (11) ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் படி 64 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன, 643 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.டி.பி டி சில்வா மற்றும் அப்பகுதியின் சில சிரேஷ்ட அதிகாரிகளின் தலைமையில் இந்த பணிகள் இடம் பெற்றன.
கல பொறியியலாளர் படையினர் மோட்டார் கிரேடர், டம் டிரக் பயன்படுத்தியும், 13 வது இலங்கை இராணுவ பாதுகாப்பு படையணியின் படையினர் டிராக்டர்கள் மற்றும் மனிதவளத்தை பயன் படுத்தி பாதை சீரமைப்பு பணியினை மேற் கொள்வர்.
அதற்கமைய இப் பகுதியில் உள்ள பொதுமக்களும் பணிகள் ஆரம்பித்தவுடன் கட்டுமானத்திற்கான அதிகபட்ச உதவிகளை வழங்கினர்.