13th June 2021 14:14:22 Hours
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கடிச்சோலையில் உள்ள முனிகாடு தெற்கில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு வெள்ளிக்கிழமை (11) உலர் உணவு பொதிகள் மற்றும் மதிய உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.ஒவ்வொரு உலர் உணவுப் பொதிகளின் பெறுமதி ரூ. 2500 / = ஆகும். இந்த திட்டமானது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியார்ச்சி அவர்களால் தொடங்கப்பட்டது.
இப்பகுதியில் நிலவும் கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி, 231 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 11 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் குறித்த குடும்பங்களின் வீடுகளுக்கு சென்று குறித்த பொதிகளை வழங்கிவைத்தனர்..