11th June 2021 20:05:09 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் தங்கள் சொந்த முயற்சியின் மூலம் புதன்கிழமை (09) திம்புலகல வன துறவிகள் விகாரைக்கு ஏராளமான காய்கறி பொதிகளை வழங்கினர்.
இந்த திட்டத்திற்கான அனுசரனையானது ஒரு சில உள்ளூர் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டதுடன் 200 கிலோவிற்கு மேற்பட்ட காய்கறிகள் விஹாரைக்கு வழங்கப்பட்டன. இந்த 'பிரிவென' இல்லத்தில் 100 க்கும் மேற்பட்ட பிக்குகள் மற்றும் புதியவர்கள் இன்னமும் பயிற்சியில் உள்ளனர்.
கடவத்மடுவ விஹாரையின் தலைவர் வணக்கத்துக்குறிய வஜிரலங்கர தேரர், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பொது பதவி நிலை பிரிகேடியர் உபுல் வீரகோன் மற்றும் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் லால் கமகெதர ஆகியோர் இந்த நன்கொடைத் திட்டத்தில் கலந்து கொண்டனர்.