Header

Sri Lanka Army

Defender of the Nation

10th June 2021 15:11:37 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு புதிய இன்பியூசன் பம்ப் இயந்திரங்கள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் ஷக்ய புத்ர அறக்கட்டளையினரால் செவ்வாய்க்கிழமை (8) முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிய இரண்டு டிஜிட்டல் இன்பியூசன் பம்ப் இயந்திரங்கள் (Digital Infusion Pump Machines) வழங்கப்பட்டன.

இந்த திட்டமானது 59 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி. டி. சூரியபண்டார அவர்களின் முன்முயற்சியால் 591 பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ பெரேரா அவர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது ஷக்ய புத்ர அறக்கட்டளையின் கல்கமுவ சாந்தபோதி தேரர், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ, 59 வது படைப் பிரிவின் தளபதி , 24 வது படைப் பிரிவின் தளபதி, வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.