Header

Sri Lanka Army

Defender of the Nation

07th June 2021 15:02:46 Hours

கடந்த 24 மணி நேரத்தில் 2,646 தொற்றாளர்கள் பதிவு

இன்று காலை (08) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,646 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 2 மற்றும் 34 பேர் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள். அவர்களில் அதிகமான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் 444 அறியப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 414 தொற்றாளர்களும் இரத்னபுரி மாவட்டத்தில் 392 மற்றும் ஏனைய மாவட்டங்களில் 1360 பேர்கள் அறியப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று காலை (08) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 207,978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 110,612 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்கள்.

இன்று (08) காலை 0600 வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 2,214 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறினர்.

இன்று (08) வரையில் (24 மணி நேரத்தில்) ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 53 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5,927 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (08) காலை 0600 வரையான காலப்பகுதியில் 18 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 273 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்.

இன்று (08) நிலவரப்படி முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிராம சேவகர் பிரிவுகளில் 77 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைபடுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள போதும், 112 கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஊடக செய்தியை வெளியிடும் நேரத்தில், நடைமுறையில் உள்ள பயணத்தடையானது மீள் அறிவிப்பு வரையில் நீடிக்கும்.