31st May 2021 14:43:51 Hours
வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் ஊடக மற்றும் உளவியல் செயல்பாட்டுப் பிரிவுகளில் பணிபுரியும் இராணுவக் குழுவினர் 150 மதிய உணவுப் பொதிகளை வவுனியா நகரத்தில் உள்ள உதவியற்றவர்களிடையே வெசாக் போய தினத்தை முன்னிட்டு மே 26 ம் திகதி பகிர்ந்தளித்தனர்.
வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகளின் ஆசீர்வாதங்களுடன் படையினர் அந்த உணவுப் பொதிகளை தாங்களே தயார் செய்து அவற்றை வவுனியா வீதிகளில் வாழ்பவர்களுக்கு பகிர்ந்தளித்தனர்.