Header

Sri Lanka Army

Defender of the Nation

27th May 2021 17:00:04 Hours

கொவிட் - 19 தடுப்புக்கான செயலணியின் தலைவர் முன் அறிவித்தலின்றி தெற்கின் தடுப்பூசியேற்றும் நிலையங்களுக்கு கண்காணிப்பு விஜயம்

அரசாங்கத்தின் அறிவறுத்தலுக்கமைய இராணுவத்தினரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் தெற்கு, வடகிழக்கு, வட மத்திய மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றதுடன் காலி, மாத்தறை, மாத்தளை, குருணாகலை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் கொவிட் – 19 பரவும் அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் மேற்படி பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அவர் இன்று (27) ஸ்ரீ சுதர்மாராமய, ஹபராதுவ, படுவன்ஹெனா, எல்பிட்டிய மற்றும் கட்டுகுறுந்த தார்மிக்க வித்தியாலயம் ஆகிய இடங்களில் படையினரின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் பகுதிகளுக்கு முன் அறிவிப்பின்றி கண்காணிப்பு விஜயமொன்றை தளபதி மேற்கொண்டிருந்தார்.

மேற்படி பகுதிகளுக்கு கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் சுகாதார நிபுணர்களுடன் விஜயம் செய்திருந்ததுடன் அவ்விடங்களில் சேவையாற்றும் இராணுவ வீரர்களுடனும் உரையாடிய பின்னர் அங்கு வருகை தந்திருந்த பொது மக்களிடத்திலும் உரையாடியதுடன் அவர்களுடைய உடல் ஆரோக்கியம் குறித்தும் கேட்டறிந்தார். அவ்விடத்தில் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய குருணாகலை,காலி, மாத்தறை, ஆகிய மூன்று மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் சீனாவிடமிருந்து நன்கொடையாக கிடைக்கப்பெற்ற 500,000 தடுப்பூசிகளை வழங்குவதற்காக சுகாதார துறையினருடன் படையினரும் கைகோர்த்துள்ளனர் என தெரிவித்தார்.

இராணுவ வைத்திய அதிகாரிகள் மற்றும் படையினர் ஹபராதுவவிலுள்ள கட்டுகுறுந்த தார்மிக்க வித்தியாலயம் இம்புல்கோட்டவிலுள்ள ஸ்ரீ தர்மோதாராமய, ரத்கம, படுவன்ஹேனவிலுள்ள ஸ்ரீ சுதர்மாராமய, எல்பிட்டிய, (காலி மாவட்டம்) ஸ்ரீ சுதர்ஷனாராம, பன்னல் மற்றும் குளியாபிட்டிய (குருணாகல் மாவட்டம்) தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் (மாத்தளை மாவட்டம்), தம்புத்தேக பொருளாதார மத்திய நிலையம் (அநுராதபுரம்) ஆகிய பகுதிகளில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொவிட் - 19 வைர்ஸ் தடுப்பூசியை ஏற்றுதலை தேசிய பொறுப்பென கருதி சில வாரங்களுக்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகர்புற பகுதிகளில் அரசாங்கத்தால் தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவ வைத்திய படையினர், சேவை வனிதையர் பிரிவினருடன் இணைந்து கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் அனுசரணையுடன், கோட்டை மொறடுவை, வௌ்ளவத்தை, தெமட்டகொடை, முகத்துவாரம், கொட்டாவ, கொழும்பு, பிலியந்தல மற்றும் கொரகாபிட்டிய, பகுதிகளில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவைகளை முன்னெடுத்ததுடன் ஏனைய தடுப்பூசியேற்றும் நிலையங்கள் சுகாதார திணைக்களம் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் நிலையங்களால் முன்னெடுக்கப்பட்டன.