19th May 2021 20:00:40 Hours
கிளிநொச்சி இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு அமைவாக, கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினரால் கடந்த திங்கள்கிழமை (17) கிளிநொச்சி இராணுவத் வைத்தியசாலையின் வளாகத்தில் வைத்து நோயாளிகளின் நலன்கருதி இரத்தம் தானம் செய்யப்ட்டது.
இந்த திட்டமானது கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய இடம் பெற்றதுடன் இந் நிகழ்வையும் அவர் பார்வையிட்டார்.
கிளிநொச்சி இரத்த வங்கியின் மருத்துவ அதிகாரி வைத்தியர் நெத்மா விஜேதிலக மற்றும் கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவரது மருத்துவக் குழுவினர் இத் திட்டத்திற்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கினர். இந்த இரத்த தானம் வழங்கும் திட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் வருகை தந்து தங்கள் இரத்தத்தை தானம் செய்தனர்.
நிகழ்வின் முடிவில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஊழியர்கள் , கிளிநொச்சியில் உள்ள மக்களின் உயிர்களைக் காப்பாற்ற இராணுவம் அளித்த ஆதரவையும் பாராட்டினர்.