Header

Sri Lanka Army

Defender of the Nation

19th May 2021 07:15:38 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட தொழில்வாண்மை குழுவினருக்கு சான்றிதழ்கள்

தொழில்முறை பிரிவின் கீழ் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் நேரடியாக இணைத்துக்கொள்ளப்பட்ட பத்து அதிகாரிகள் தங்களது கூட்டு நிபுணத்துவ அதிகாரிகளின் அடிப்படை திசை முகப்படுத்தல் பாடநெறி - 10 மற்றும் நேரடி இணைத்துக்கொள்ளப்பட்ட அதிகாரி பயிலிளவல் பாடநெறி - 9 (1) ஆகியவற்றை தியத்தலாவையிலுள்ள இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையில் நிறைவு செய்தனர். இப் பயிற்சியின் சான்றிதல் வழங்கி வெளியேறும் நிகழ்வானது தியதலாவையில் உள்ள இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் வியாழக்கிழமை (13) இடம் பெற்றன. இந் நிகழ்வானது கொவிட் -19 சுகாதார வழிகாட்டுதல்கள்களை பின்பற்றி இடம்பெற்றது.

தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் கணக்கியல் ஆகியவற்றில் தகுதி பெற்ற அந்த தொழில் வல்லுநர்கள், தியதலாவையில் உள்ள இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக பயிற்ச்சி பாடசாலையில் அடிப்படை பாடநெறிகளை பின்பற்றினர்.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்கள் கலந்து கொண்டார்.

தொண்டர் படை பயிற்சி பாடசாலையின் தளபதி கேணல் எச்.ஏ. கீர்த்திநாத, அவர்கள் பயிற்சி திட்டத்தை நிறைவு செய்தார். இந் நிகழ்வின் முக்கிய உரையாற்றிய பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் கொட்டுவேகொட அவர்கள் இராணுவத்தின் முக்கிய மதிப்புகள், நூற்றாண்டு பழமையான கலாச்சாரம் மற்றும் இராணுவத்தில் பொதிந்துள்ள விதிமுறைகள், தொழில் தகைமை, விசுவாசம் மற்றும் ஒருமைப்பாட்டின் பண்புகள் ஆகியவற்றில் பெருமளவில் கவனம் செலுத்தியதுடன் அதனை அந்த தொழில் வல்லுநர்களிடம் நெருக்கமாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டனர்.

பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் தொண்டர் படை பயிற்சி பாடசாலையின் தளபதி விருது வழங்கும் விழாவைப் பற்றிய விரிவான அறிமுகத்தை வழங்கினார்.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படை தலைமையகத்தின் பிரதி படைத் தளபதி , பிரதம பதவி நிலை அதிகாரிகள், பயிற்சி ஆய்வாளர், பிரிகேடியர் நிர்வாகம், பிரிகேடியர் விநியோகம் , கேணல் இராணுவ செயலாளர் (தொண்டர்), ஆட்சேர்ப்பு அதிகாரி மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகம் மற்றும் தொண்டர் படை பயிற்சி பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.