Header

Sri Lanka Army

Defender of the Nation

19th May 2021 19:15:49 Hours

தனியார் நிறுவனத்தினால் 10 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் சீதுவை இடை நிலை பராமரிப்பு மையத்திற்கு அன்பளிப்பு

சீதுவையிலுள்ள இராணுவ மேம்படுத்தப்பட்ட இடைநிலை பராமரிப்பு மையமானது தற்பொழுது முடியும்தருவாயிலுள்ள நிலையில், வரையறுக்கப்பட்ட அப்பீல்ட் இலங்கை தனியார் நிறுவன நிர்வாகமானது இன்று காலை (17) புதிய இடை நிலை பராமரிப்பு மைய பயன்பாட்டிற்கான 10 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை இராணுவத்திற்கு வழங்கியது.

வரையறுக்கப்பட்ட அப்பீல்ட் இலங்கை தனியார் நிறுவன நாட்டின் தலைவரும் வாடிக்கையாளர் மேம்பாட்டு பணிப்பாளருமான திரு அனுருத்த ஆலுவிஹாரே அவர்கள் , கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்து அதில் ஒரு படுக்கையை அதிகாரபூர்வமாக கையளித்தார்.

குறித்த செயற்பாடு மற்றும் மருத்துவத் தேவை குறித்த நிறுவனத்தின் அக்கறை ஆகியவற்றை கருத்தில்கொண்டு நன்கொடை வழங்கியமைக்காக இராணுவத் தலைவரின் தனிப்பட்ட நண்பரான திரு அனுருத்த ஆலுவிஹாரே மற்றும் புதிய இடை நிலை பராமரிப்பு மையத்திற்கு நன்கொடை வழங்கியமைக்கு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

முதல் ஒரு படுக்கை நன்கொடையை அதிகாரபூர்வமாக பெற்றுக்கொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா நன்கொடையாளருக்கு நினைவு பரிசு ஒன்றினையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் மருத்துவ சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் நிஷாந்த பத்திரன அவர்களும் கலந்துகொண்டார்.