15th May 2021 10:13:25 Hours
இன்று காலை (17) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2275 நபர்களுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அதிகமாக 438 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் 56 பேர் மிரிஹான, 39 பிலியந்தல, 42 பேர் பிலியந்தல 38 பேர் முல்லேரியா மற்றும் 37 பேர் மொரடுவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கிறது.
இதேபோல், பியகம 173, கட்டுநாயக்க 57, சீதுவை 43, கடவத்தை 16 உட்பட கம்பஹா மாவட்டத்தில் 410 பேரும் மற்றும் ஏனையோர் மாவட்டத்தில் வேவ்வேறு பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், 115 ஹபராதுவ நகரப் பகுதி, 35 எல்பிடிய, 16 வதுரம்ப காலி மாவட்டத்தில் இருந்து 261 நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன்ஏனையவர்கள் காலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் இருந்து 1109 நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். ஏனைய 1166 நோயாளிகளில் களுத்தறை 241, நுவரெலிய 179, கண்டி 138, குருநாகல் 100, கேகாலை 89, ரத்னபுரி மாவட்டம் 84, மாத்தறை 46, அம்பாறை 38, பதுல்லை 29, முல்லைத்தீவு 24,அனுராதபுரம் 22, வவுனியா 17, மாத்தலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் 14, , திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டம் 13, பொலனருவை மாவட்டம் 10, யாழ்ப்பாணம் 09, மொனராகலை மாவட்டம் 08, கிளிநொச்சி 07, மட்டக்களப்பு மற்றும் புத்தளத்தில் 04 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.