14th May 2021 14:00:23 Hours
இன்று காலை (16) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2386 நபர்களுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அதிகமான 338 பேர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். 33 பேர் கண்டி நகர் , 32 பேர் மெனிக்கின்ன ,27 பேர் தலாதுஓயா மற்றும் 24 பேர் கட்டுகஸ்தோட்டை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கிறது.
இதேபோல் பானந்துரை தெற்கு 87 , புலத்சிங்கள 45 , பதுரெலிய 39 , பானந்துரை வடக்கு 25பேர் உட்பட களுத்துரை மாவட்டத்தில் 321 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், மற்றும் ஏனையவர்கள் குறித்த மாவட்டத்தில் ஏனைய பகுதிகளிலும் பதிவாகியுள்ளனர்.
இதற்கிடையில், நுவரெலிய மாவட்டத்தில் 288 நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர், இவர்களில் 173 பேர் நுவரெலிய நகரம் , 37 பேர் பூண்டலுஓயா 21 பேர் லிந்துல பிரதேசம் மற்றும் ஏனையவர்கள் நுவரெலிய மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், கண்டி, களுத்தறை மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் 947 நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். ஏனைய 1437 தொற்றாளர்கள், கொழும்பு 277, கம்பஹா 184, குருநாகல் 181, மாத்தறை 104, அனுராதபுரம் 98, ரத்னபுரி 94, காலி 82, புத்தளம் 81, ஹம்பாந்தோட்டை 72, மொனராகலை 64, அம்பாறை 41, யாழ்பாணம் 33, பதுள்ளை மாவட்டம் 26, கேகாலை மாவட்டம் 23, மட்டக்களப்பு மாவட்டம் 19, மன்னார் 12, பொலனருவை 11, வவுனியா 10, கிளிநொச்சி 4 மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 நபர்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.