14th May 2021 10:30:04 Hours
இன்று காலை (15) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2289 நபர்களுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அதிகமான 555 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் 126 பேர் பிலியந்தல, 42 மொரடுவ ,35 பேர் மஹாரகம மற்றும் 33 பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கிறது.
இதேபோல் காலி மாவட்டத்தில் 281 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், ஹபராதுவ 130 ராகம 35, யக்கலமுல்ல 19 கொஸ்கொட 15 பேர் மற்றும் ஏனையவர்கள் காலியில் பதிவாகியுள்ளனர்.
இதற்கிடையில், கம்பஹா மாவட்டத்தில் 236 நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இவர்களில் 36 பேர் கம்பஹா, 26 பேர் வத்தலை மற்றும் 25 பேர் பியகம ஏனையவர்கள் கம்பஹா பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், கொழும்பு, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து 1072 நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். ஏனைய 1217 தொற்றாளர்கள், குருநாகலை 218, களுத்தறை 211, புத்தளம் 99, மாத்தறை 79, கேகாலை 73, நுவரெலிய மாவட்டம் 71, அம்பாறை மற்றும் யாழ்ப்பாணத்தில் 45, ஹம்பாந்தோட்டை 40, கண்டியில் 38, ரத்னபுரி 35, அனுராதபுரம் 35, பொலனருவை மாவட்டம் 29 , திருகோணமலை 24, மொனராகலை மாவட்டம் 22, , பதுள்ளை 20, கிளிநொச்சி 12 , மட்டக்களப்பு 11 , வவுனியா 10 , மற்றும் முல்லைத்தீவு மாவட்டதில் ஒரு நபரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.