Header

Sri Lanka Army

Defender of the Nation

12th May 2021 23:25:20 Hours

கொழும்பில் இடம்பெற்றுவரும் தடுப்பூசி திட்டத்தை பார்வையிட்ட இராணுவத் தளபதி

கொவிட்-19 தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கொழும்பில் தடுப்பூசி திட்டம் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனிக்கும் முகமாக, மொரட்டுவை கடுபெட்ட சிறுவர் பூங்காவிலுள்ள இராணுவ சேவா வனிதா பிரிவினால் நிர்வகிக்கும் தடுப்பூசி மையத்திற்கு இன்று காலை (12) தனது விஜயத்தை மேற்கொண்டார்.

சீதுவையில் இராணுவத்தால் மேம்படுத்தப்பட்ட புதிய இடைநிலை பராமரிப்பு மையத்தின் செயல்பாட்டுக்கு பிண்ணனியாக திகழ்ந்த திருமதி சுஜீவா நெல்சன் தலைமையிலான இராணுவ சேவா வனிதா பிரிவு, மொரட்டுவையில் இந்த தடுப்பூசி மையத்தை இராணுவ மருத்துவ ஊழியர்களுடன் ஒரு தேசிய உறுதிப்பாடாகக் கருதி நடத்த முன்வந்ததுடன் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் பல தடுப்பூசி மையங்கள் கொழும்பில் செயல்பட்டு வருகின்றன.

ஒரு சில மூத்த அதிகாரிகளுடன், அவர் பல தடுப்பூசி மையங்களுக்குச் சென்று, அங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் மற்றும் சேவை ஊழியர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். தடுப்பூசிக்காகக் காத்திருந்து, அவர்கள் கடைப்பிடிக்கும் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து சில பொதுமக்களிடமும் அவர் பேசினார்.