11th May 2021 23:07:02 Hours
இன்று காலை (11) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2624 நபர்களுக்கு கொவிட் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரகளில் 551 பேர் கம்பாஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் திவுலப்பிட்டிய 120 பேர், சீதுவை 63 பேர், கட்டான 58 பேர், மினுவங்கொட 51 பேர் சேர்ந்தவர்கள் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கிறது.
இதேபோல் களுத்துறை மாவட்டத்தில் இருந்து 362 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பானதுறை தெற்கு 67, பானதுறை 62, புலத்சிங்கள 43, மத்துகம 31 என பதிவாகியுள்ளன. இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 321 நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இவர்கள் பிலியந்தலை 50 பேர், தலங்கம 35 பேர், கொழும்பு 32 பேர், ஏனையவர்கள் கொழும்பின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், கொழும்பு, கம்பஹா மற்றும் கறுத்துறை மாவட்டங்களில் இருந்து 1234 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ஏனைய 1390 நோயாளிகள் பின்வருமாறு பதிவாகியுள்ளனர்: குருநாகலை 177, காலி 170, மாத்தறை 19, கேகாலை 39, பதுளை 23, 13 அம்பாறை, 83 அனுராதபுரம், திருகோணமலை 36 முல்லைத்தீவு 1, நுவரெலியா 184, கண்டி 50, 128 இரத்னபுரி, புத்தளம் 46, யாழ்ப்பாணம் 109, மாத்தளை 26, கிளிநொச்சி 22, பொலன்னறுவை 54, ஹம்பாந்தோட்டை 41 பேர், மொனராகலை 92 பேர், மட்டக்களப்பு 26 பேர்.