10th May 2021 22:19:27 Hours
இன்று காலை (10) நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 2672 நபர்களுக்கு கொவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 13 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் எஞ்சிய 2659 பேர் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களும் ஆவர் இதில் கொழும்பிலிருந்து 755 பேரும் கம்பாஹா மாவட்டத்தைச் சேர்ந்த 323 பேரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 234 பேரும், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 1347 பேரும் அடங்குவர் என கொவிட் பரவரலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் கூறுகிறது.
இன்று காலை (10) வரை இறந்தவர்கள் உட்பட மீன் சந்தை மற்றும் மினுவங்கொடை பிராண்டிக்ஸ் கொத்தணியின் 90,637 பேரும் நாடு முழுவதிலுமிருந்தும் 35,293 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர் இனங்காணப்பட்ட 29,230 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று காலை (10) வரை கொவிட் தொற்றாளர்களாக 125,905 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 104,462 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலயத்தில் நாட்டில் 15 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இன்று காலை (10) நிலவரப்படி 6,285 பேர் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 76 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காலை 0600 மணிவரையான கடந்த24 மணித்தியாலயத்தில் 1365 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று காலை (10) இந்த வெளியீடு வெளியிடுகையில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் விடுவிக்கப்பட்டும் உள்ளன.