Header

Sri Lanka Army

Defender of the Nation

06th May 2021 15:50:54 Hours

மேலும் 1939 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்

இன்று காலை (06) நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1939 நபர்களுக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 42 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் எஞ்சிய 1897 பேர் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களும் ஆவர் இதில் கொழும்பிலிருந்து 498 பேரும் கம்பாஹா மாவட்டத்தைச் சேர்ந்த 387 பேரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 377 பேரும், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 635 பேரும் அடங்குவர் என கொவிட் பரவரலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் கூறுகிறது.

இன்று காலை (05) வரை இறந்தவர்கள் உட்பட மீன் சந்தை மற்றும் மினுவங்கொடை பிராண்டிக்ஸ் கொத்தணியின் 90,637 பேரும் நாடு முழுவதிலுமிருந்தும் 5,933 பேர் இனங்காணப்பட்டிருந்தனர் அவர்களில் 98,113 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் . புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர் இனங்காணப்பட்ட 18,992 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று காலை (06) வரை கொவிட் தொற்றாளர்களாக 117,528 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 100,075 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலயத்தில் நாட்டில் 14 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளனர். இன்று காலை (06) நிலவரப்படி 8,437 பேர் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 81 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காலை 0600 மணிவரையான கடந்த 24 மணித்தியாலயத்தில் 734 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று காலை (06) இந்த வெளியீடு வெளியிடுகையில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன