Header

Sri Lanka Army

Defender of the Nation

29th April 2021 14:00:55 Hours

தொற்று பரவல் காரணமாக மேலும் பல பகுதிகள் முடக்கம்

இன்று காலை (29) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1466 நபர்களுக்கு கொவிட் -19 க்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 15 பேர் வெளிநாட்டிலிருந்நு வருகை தந்த இலங்கையர் ஆவர். எஞ்சிய 1451 பேர் உள்நாட்டில் அடையாளம் இனங்காணப்பட்டவர்கள். இதில் பெரும்பாலானவர்கள் (228) கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கம்பஹா மாவட்டம் 209 பேர், குருநாகலை மாவட்டம் 172 பேர் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 842 என கொவிட் 19 பரவலை தடுப்பிற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை (29), மீன் சந்தை மற்றும் மினுவங்கொடை பிராண்டிக்ஸ் கொத்தணி (99,688), இறந்தவர்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்தும் இனங்காணப்பட்டவர்களின் மொத்தம் 104,952 ஆகும். அவர்களில் 95,083 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 9,208 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 227 நோயாளிகள் பூரணமாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி இன்று காலை (29) நாட்டில் கொவிட் -19 இறப்பு எண்ணிக்கை 661 ஆக உயர்ந்துள்ளது.. இன்று காலை (29) நிலவரப்படி, 113 முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 11,241 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை (29) காலை வரை குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரதேசம், திட்டவெல்கம, கும்புக் கெட்டே மற்றும் நிக்கதலுபொத ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளும், ஆதிகாரிகொட, மிரிஸ்வத்த, பெலவத்த வடக்கு மற்றும் பெலவத்த கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் களுத்துறை மாவட்டத்திலும் கம்பாஹா மாவட்டத்தில் பொல்ஹேன ஹீரகுலகெதர களுஹங்கல அஸ்வென்னவத்தை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுகளும் திருகோணமலை மாவட்டத்தில் பூம்புஹார், சுமைதாங்கிபுரம் (உப்புவெலி), மூதூர், கோவிலடி, லிங்கநகர், காவெட்டிகுடா மற்றும் சீனக்குடா கிராம சேவையாளர் பிரிவுகளும், காலி மாவட்டத்தில் இம்புலகட மற்றும் கடுதம்பே கிராம சேவையாளர் பிரிவுகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் சிரிகெத கிராம சேவையாளர் பிரிவும். மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள பொருளாதார மையம்.பல்லேக் கும்புர அளுகொல்ல கிராம சேவையாளர் பிரிவுகளும் மொனராகலா மாவட்டத்தில் வெல்லவாய நகரம், வெஹராயாய, கொட்டம்கம்பொக்கெ மற்றும் ரஹதங்கம ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன.