16th April 2021 16:35:11 Hours
இலங்கை சிங்க படையணியின் பிரிகேடியர் கனிஷ்க ஹெயந்துடுவ அவர்கள் வியாழக்கிழமை (8) இராணுவ தலைமையக நலன்புரி பணிப்பகத்தின் 32 வது பணிப்பாளராக பதவியேற்றார்.
அங்கு இடம்பெற்ற மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிதாக நியமிக்கப்பட்ட நலன்புரி பணிப்பாளர் அவர்கள் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந் நிகழ்வில் பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.
பிரிகேடியர் சனத் அலுவிஹாரை அவர்கள் அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து இவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்னர், பிரிகேடியர் ஹெயந்துடுவ அவர்கள் பாதுகாப்புப் பதவி நிலை அலுவலகத்தில் உள்ள முகாமைதுவ நிலையத்தின் பணிப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கவிடயமாகும்.