18th April 2021 21:30:41 Hours
வற்றாப்பளை கன்னகி அம்மன் ஆலயத்தின் புத்தாண்டு பூஜை ஊர்வலத்திற்கு முன்னதாக முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 59 வது படைபிரிவின் 591 வது பிரிகேட்டின் படையினரால் சுற்றுப்புறம் மற்றும் சாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் ஏப்ரல் 10 ம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
செஞ்சிலுவை சங்கம் இந்த திட்டத்திற்கான நீர் பவுசர்களை வழங்கி உதவியது. சுத்தம் செய்வதற்கான நீரினை படையினர் அருகிலுள்ள கிணற்றில் இருந்து பெற்றுக் கொண்டனர். பூஜை தினத்தில் ஆலய பிரதம குருக்களால் படையினர் அழைக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டனர்.
59 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் பி. சூரியபண்டார மற்றும் 591 வது பிரிகேட் தளபதி கர்ணல் சுஜீவ பெரேரா ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. latest Nike release | Women's Sneakers