10th April 2021 19:05:28 Hours
பனாகொடையிலுள்ள இராணுவ தங்குமிட வளாகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் இன்று (09) பனாகொடை இராணுவ முகாமுக்குள் அமைக்கப்படவுள்ள புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
இதன்போது வளாகத்தின் நுழைவாயில் இராணுவ தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்ட பின்னர் தளபதி எரிபொருள் நிரப்பு நிலையம் அமையப்பெறவுள்ள படலவத்த பகுதியை பார்வையிட்டார்.
மத அனுட்டான நிகழ்வுகளுக்கமைய மகா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் பிரதம விருந்தினரால் எரிபொருள் நிரப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. பின்னர் 1 வது பொறியியல் படையின் சிரேஸ்ட அதிகாரி ஒருவரினால் முழு திட்டம் தொடர்பாக இராணுவத் தளபதியிக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வழங்கல் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, நலன்புரி பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் கனிஷ்க ஹெயந்துதுவ, பொறியியலாளர் சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த குமார, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர். Sport media | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ