07th April 2021 14:09:49 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையர் ஒருவருடைய நிதி உதவியுடன் மற்றுமொரு வறிய குடும்பத்திற்கான வீடொன்று நிர்மாணித்து சனிக்கிழமை (03) பயனாளியிடம் கொடுக்கப்பட்டது.
தளபாடங்களுடன் கூடிய குறித்த புதிய வீடானது, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 படைப்பிரிவின் 212 பிரிகேடினரால் மதவச்சி தந்தரிமலை திருமதி சேபாலிகா பியதாச மற்றும் அவரது 8 வயதுக்குட்பட்ட மூன்று பிள்கைளுக்காக புதிய வீடு கையளிக்கப்பட்டது.
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் 21 வது படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் வழி காட்டலின் கீழ் 212 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் தங்குமிடம் இல்லாமல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வந்த குறித்த பெண்ணுக்கு வீடு வழங்கி வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையரான திரு . அநுர நாணயக்கார மற்றும் திருமதி சந்தியா நாணயக்கார ஆகியோர் நிர்மாணப் பணிகளுக்கான நண்கொடையினை வழங்கியிருந்தனர்.
இந் நிகழ்வு மகா சங்க உறுப்பினர்களின் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் 21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரிகேடியர் அனில் பீரிஸ் மற்றும் பிரிகேடியர் ரொஹான் ராஜபக்ஷ ஆகியோருடன் இணைந்து ரிப்பன் வெட்டி புதிய வீடு திறந்து வைக்கப்பட்டது. 212 பிரிகேடின் தளபதி உள்ளிட்ட அதிகாரிகள் , சிப்பாய்கள் மற்றும் பயனாளி குடும்பத்தின் உறவினர்கள் சிலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். Running Sneakers Store | Air Jordan