03rd April 2021 06:45:37 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் ஏற்பாட்டில் புவியியல் தகவல் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பயன்பாடுகள் குறித்து படையினருக்கான இருநாள் பயிற்சி பட்டறை ஒன்று மார்ச் 30 -31 ஆம் திகதிகளில் கொக்காவில் ரணவீரு தகவல் பயிற்சி நிலையத்தில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிகள் வரைப்படமாக்கள் மற்றும் தரவு சேமிப்பு நடைமுறைகளை அடிப்படையாக கொண்டத் இந்த பயிற்சி பட்டறையில் அறிவுறுத்தப்பட்டதுடன், பதிவு மற்றும் திட்டமிடல் பிரிவின் ஆய்வு மதிப்பீடு திட்ட மேம்பாட்டு பிரிவின் பிரிகேடியர் எஸ்.டி.உதயசேன இந்த செயலமர்வை முன்னெடுத்தார்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணி நிலை அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிப்பாய்கள் இந்த செயலமர்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. bridge media | Men's Sneakers