25th March 2021 10:08:15 Hours
கொழும்பிலுள்ள சிங்கள பல மண்டலவின் தலைவர் திரு. காமினி கீர்த்திசந்திர அவர்களால் வழங்கப்பட்ட நன்கொடையின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது படைப்பிரிவின் 222 வது பிரிகேடின் 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையின் படையினரால் பேரமடுவ ஆரம்ப பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (22) நடைபெற்றது.
22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் 222 பிரிகேட் தளபதி கேணல் எம்.ஜி.டபிள்யூ.விமலசேன அவர்களின் மேற்பார்வையில் 5 (தொ) வது இலங்கை பீரங்கி படையினரால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்தோடு நிகழ்வில் 222 வது பிரிகேட் தளபதி, 5 (தொ) இலங்கை பீரங்கி படையின் கட்டளை அதிகாரி, 222 பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்தின் உதவி பணிப்பாளர் , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர். latest Nike release | jordan Release Dates