17th March 2021 22:12:52 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 8 வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு தியத்தலாவையில் மத அனுட்டான நிகழ்வுகள் மற்றும் மரம் நடுகை திட்டங்களும் சனிக்கிழமை 13 ஆம் திகதி இடம்பெற்றன.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்கள் முதல் நாள் 12 ஆம் திகதி போதிகந்த விகாரையில் பிரித் பராயண நிகழ்வுகளில் ஈடுபட்டர்.
மத்திய பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமஹேவா அவர்களுக்கு அன்றைய தினத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் மத்திய பாதுகாப்பு படைத் தளபதியால் தியதலாவையிலுள்ள திருமணமான இராணுவ வீரர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் மரம் நாட்டும் திட்டதினை ஆரம்பித்து வைத்ததோடு மதிய நேர விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது. Best Authentic Sneakers | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!