17th March 2021 14:35:40 Hours
இலங்கை இராணுவ தலைமை சமிக்ஞை அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ், வெள்ளிக்கிழமை (12) 3 வது இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்திற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார்.
3 வது இலங்கை சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி, லெப்டினன் கேணல் எச்.ஏ.டி.டபிள்யூ ஹெட்டியராச்சி அவர்களால் படையணி தளபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன், படையினரின் காவலர் அறிக்கையிடலின் பின்னர் போர் வீரர்களின் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், படையினரின் செயற்பாடுகள் தொடர்பிலான விளக்கமொன்றை பெற்றுக்கொண்ட அவர் , யாழ். பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பேரேராவை சந்திக்க புறப்பட்டுச் சென்றார்.
யாழ்ப்பாண தளபதியுடனான கலந்துரையாடலுக்குப் பின்னர், வருகை தந்த மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் 3 வது இலங்கை சமிக்ஞை படையணியின் தலைமையகத்திற்குத் திரும்பினார். அங்கு அவரது வருகையை குறிக்கும் விதமாக ஒரு மரக்கன்றினை நாட்டி வைக்கப்பட்டதுடன், படையினருக்கான உரையொன்றினை நிகழ்த்திய பின்னர் படையணியின் கட்டளை அதிகாரியுடன் நினைவுச் சின்னங்களையும் பகிர்ந்துக்கொண்டார்.
அங்கிருந்து அவர் புறப்படுவதற்கு முன்பாக விருந்தினர் பதிவேட்டில் தனது எண்ணப்பகிர்வுகளை குறிப்பிட்டார். latest Running | Air Jordan