12th March 2021 17:12:13 Hours
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் புனீத் சுஷில் வியாழக்கிழமை (11) வடக்கு மாகாணத்திற்கான தனது விஜயத்தின் ஒரு அங்கமாக வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாரவை சந்தித்தார்.
வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகரை வரவேற்றதுடன், அப்பகுதியில் தற்போதைய நிலைமை மற்றும் சமூக நலத் திட்டங்களில் இராணுவத்தின் ஈடுபாடு மற்றும் சிவில் சமூகத்திற்கு உதவி செய்தல் குறித்த கருத்து பறிமாற்றங்களையும் செய்துகொண்டனர். சந்திப்பின் நிறைவம்சமாக இருவரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர். latest Running | Nike Shoes