10th March 2021 19:15:19 Hours
இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட கெப்டன் ககு பகஹூரா பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை புதன்கிழமை (10) இராணுவ தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின் போது, கொவிட் – 19 பரவலை கட்டுப்படுத்தலின் போது படையினரின் அர்பணிப்பு மற்றும் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பு, நாட்டில் பின்பற்றப்படும் கொவிட் - 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
கலந்துரையாடலின் நிறைவில் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் கெப்டன் குகா பகஹூரா ஆகியோர் நல்லெண்ண அடிப்படையில் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர். Sports News | FASHION NEWS