Header

Sri Lanka Army

Defender of the Nation

08th March 2021 14:38:08 Hours

போரில் காயமடைந்த சிப்பாய்க்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய திருமண வாழ்வில் நுழைவு

2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புக்கு எதிராக கம்பீரமாக நின்று போராடிய சந்தர்ப்பத்தில் தனது இடது காலை பறிகொடுத்த கொமாண்டோ படையணியின் சிப்பாய் பெலும்மஹர செனெத்ம மண்டபத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக திருமண வாழ்வில் திங்கட்கிழமை (08) நுழைந்தார். இந்த திருமண நிகழ்வில் சாட்சியக் கையெழுத்தை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவ தளபதியும், கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பதிவிட்டமை சிறப்பம்சமாகும்.

காயங்களுக்கு உள்ளாகிய பெலும்மார உடுகமவில் வசிக்கும் கோப்ரல் சம்பத் டயிள்யூ.பி.பி. என்ற போர் வீரரின் திருமண நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றதுடன், புனர்வாழ்பு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர அவர்களின் அறிவுரையின் படி, சியனேவ அபி அமைப்புடன் இணைந்து நிகழ்வுக்கான சகல முன்னேட்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கோப்ரல் சம்பத் டயிள்யூ.பி.பி.என்ற போர் வீரர் 2007 ஆம் ஆண்டில் இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன், மனிதாபிமான நடவடிக்கைகள் உச்சகட்டத்தை அடைந்திருந்த போது 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி தனது இடது காலை பறிகொடுத்ததால் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து இராணுவ புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்க வந்த தனது காதலியை கண்டுகொண்டதுடன், அவருடன் திங்கட்கிழமை (08) திருமண வாழ்வில் இணைந்துகொண்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா அங்கவீன இராணுவ வீரர் சார்பில் கலந்துகொண்டதுடன், மணமக்கள் சார்பில் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் பங்கேற்புடன் இந்த திருமண நிகழ்வு நடைபெற்றது. அதனையடுத்து மணமக்களுக்கு தனது வாழ்த்துக்களை கூறிக்கொண்ட பிரதம விருந்தினர் பெறுமதியான பரிசொன்றினையும் அவர்களுக்காக வழங்கிவைத்தார். கோப்ரல் சம்பத் டயிள்யூ.பி.பி.என்ற சிப்பாய் 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டிகளிலும் படகோட்டுதல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

‘காதல் அனைவரையும் வெல்லும் என்ற வகையில், செல்வி நிலுஷா குமுதுனி தனது தாயிடமிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் தேவையான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர், தனது வருங்கால கணவனை வாழ்நாள் முழுவதும் சிறப்பாக கவனித்துக்கொள்வதாக அவரது பெற்றோருக்கு உறுதியளித்தார். இத்திருமணத்தில் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களும் இடம்பெற்றன.

வாழ்க்கைப் பயணத்தில் ஏதேனும் சவால்களை எதிர்கொள்ளத் தீர்மானித்த அவரது வருங்கால மனைவி, நிலுஷா மறுவாழ்வு பணிப்பகம் மற்றும் கொமாண்டோ படையணி ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் மணமக்கள் அலங்கரிப்பு முதலான அனைத்து திருமண ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார உள்ளடங்களான சிரேஸ்ட அதிகாரிகள், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் கொமண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்‌ஷ, நிறைவேற்று நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க, புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர். buy footwear | Nike