Header

Sri Lanka Army

Defender of the Nation

01st March 2021 23:50:26 Hours

மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று (02) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 310 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 07 பேர் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பதுடன் ஏனைய 303 பேரும் உள்நாட்டில் இணங்காணப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் 60 பேர் கொழும்பு மாவட்டம், 40 பேர் கம்பஹா மாவட்டம், 34 பேர் இரத்னபுரி மாவட்டம், ஏனைய மாவட்டங்களில் 169 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி (02) ஆம் திகதி காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாக மரணித்தவர்கள் உட்பட 83,551 தொற்றுள்ளவர்கள் இணங்கானப்படுள்ளதுடன் அவர்களில் 79,897 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி மற்றும் மினுவான்கொடை பிரெண்டெக்ஸ் ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்களாவர். 79,421 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 3,654 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 475 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றினால் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. மரணித்தவர்கள் புலோத்கொஹுபிட்டிய, கொழும்பு 10, கண்டி, கனேமுள்ள, மற்றும் பூஜாபிட்டிய ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி (02) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 476 ஆகும்.

மேலும், (02) காலை நிலவரப்படி முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 95 தனிமைப்படுத்தல் மையங்களில் 9,891 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (01) 9,822 .பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Best Sneakers | AIR MAX PLUS