25th February 2021 14:20:46 Hours
கொமாண்டோ படையணியின் பிரிகேடியர் ஜயந்த பாலசூரிய இராணு தலைமையகத்திலுள்ள திட்டப் பணிப்பகத்தின் 23 வது திட்ட பணிபாளராக வியாக்கிழமை (25) பதவியேற்றுக்கொண்டார்.
இதன்போது மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பிரிகேடியர் ஜயந்த பாலசூரிய அலுவலக கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கைசாத்திட்டார். இந்நிகழ்வில் தலைமையகத்தின் பதவி நிலை அதிகாரிகளும் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் ஜயந்த பாலசூரிய, வெரஹெரவிலுள்ள கொத்தலாவை பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் நிர்வாக பணிப்பாளராக சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தகது.
அத்தோடு இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற மேஜர் ஜெனரல் கித்சிறி ஏகநாயக்கவுக்கு பதிலாக இவர் பதவியேற்றுள்ளார். Nike shoes | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger